அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல விஷயங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
x
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள், ஒற்றைத் தலைமை கோரி போர்க்கொடி தூக்கிய ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் உட்கட்சி விவகாரம், மக்களவை,  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராஜன் செல்லப்பா கருத்துக்கு ஆதரவு தெரிவித்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. அதேபோல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்படவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்