பொன்னணியாறு அணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
மணப்பாறை அருகில் உள்ள பொன்னணியாறு அணையை தூர்வாரி, பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மணப்பாறை அருகில் உள்ள பொன்னணியாறு அணையை தூர்வாரி, பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செம்மலை, பெருமாள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, இந்த அணை மூலம், கரூர், திருச்சி ஆகிய இரு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 101 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாசனவசதி பெற்று வந்தன. கடந்த ஏழு ஆண்டுகளாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அணையின் முழுக்கொள்ளளவான 51 அடியில் 10 அடி வரை சேறும் சகதியுமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
Next Story