சமூக வலைதளத்தில் ஆபாசமாக படம் வெளியானதால் கல்லூரி மாணவி, அத்தை மகன் தற்கொலை : ஜி.கே.மணி நேரில் ஆறுதல்
சமூக வலைதளங்களில் ஆபாசமாக படம் வெளியானதால் தற்கொலை செய்த மாணவி மற்றும் அவரது அத்தை மகன் குடும்பத்தாருக்கு பா.ம.க தலைவர் ஜி.கே. மணி நேரில் ஆறுதல் கூறினார்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, சமூக வலைதளங்களில் ஆபாசமாக படம் வெளியானதால் தற்கொலை செய்த மாணவி மற்றும் அவரது அத்தை மகன் குடும்பத்தாருக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே. மணி நேரில் ஆறுதல் கூறினார்.பின்னர், கடலூர் ஆட்சியர் அன்பு செல்வனை சந்தித்த ஜி.கே.மணி, பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், வழங்கிடுமாறு மனு அளித்தார்.
Next Story