தண்ணீர் பிரச்சனையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு  வைகோ கோரிக்கை
x
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் ,  குடிநீருக்காக பெண்கள் நாள்தோறும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக  தமிழக அரசு 400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள  நிலையில் மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க விரைந்து செயலாற்ற வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்