கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் - வீரப்ப மொய்லி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக விரும்பினால் கட்சியை சரியான நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்யின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கோரிக்கை வைத்துள்ளார்.
கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் - வீரப்ப மொய்லி
x
பெங்களூருவில் செய்தியாளரிடம் பேசிய அவர், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கமின்மை அதிகரித்து வருவதாக கூறினார். தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை கட்சியின் தலைவராக அவர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே கட்சியின் கட்டுக்கோப்பை காக்க இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உறுதியான தலைவர் என கூறியுள்ள வீரப்பமொய்லி, தலைவர் பதவியில் இருந்து அவர் விலகும் பட்சத்தில் கட்சியை மறுசீரமைப்பு செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நேர்மையான, சரியான நபரிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வீரப்ப மொய்லியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்