மாங்காய் திருடியதாக சிறுவன் சிறைப்பிடிப்பு - சிறுவனை விடுவிக்க ரூ10,000 கேட்ட உரிமையாளர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் என்பவரின் மகன் ருத்ரகுமார் அப்பகுதியில் சிகாமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மாங்காய் பறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிகாமணி குடும்பத்தினர் சிறுவன் ருத்ரகுமாரை சிறைப்பிடித்துள்ளனர். தகவலறிந்து சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனை மீட்க சென்றுள்ளனர். ஆனால் ருத்ரகுமாரை விடுவிக்க பத்தாயிரம் ரூபாயை கேட்டு சிகாமணி அதிர்ச்சி அளித்துள்ளார்.இதனையடுத்து போலீசார் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சிறுவன் ருத்ரகுமாரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Next Story