"கேரளா 12.75 லட்சம் டன் காய்கறிகளில் இறக்குமதி செய்கிறது" - கேரள அமைச்சர் தகவல்
கேரளாவிற்கு தேவைப்படும் 20 லட்சம் டன் காய்கறிகளில் 12.75 லட்சம் டன் காய்கறிகள் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படுவதாக கேரள விவசாய துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.
கேரளாவிற்கு தேவைப்படும் 20 லட்சம் டன் காய்கறிகளில் 12.75 லட்சம் டன் காய்கறிகள் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படுவதாக கேரள விவசாய துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் நிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்யும் காய்கறிகளை பயன்படுத்தும் வகையில் "திருவோணத்திற்கு ஒரு முறம் காய்கறி" என்ற பெயரில் கேரள அரசின் திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. அதையொட்டி, திருச்சூரில் நடைபெற்ற விதைகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், வெளிமாநில காய்கறி இறக்குமதியை குறைப்பதற்காக பண்டிகைக்கு மக்களே சுயமாக உற்பத்தி செய்யும் வகையில் அரசு திட்டம் வகுத்ததாக குறிப்பிட்டார்.
Next Story