காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா : இருசக்கர வாகன திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணன் என்பவர், மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார்
காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா : இருசக்கர வாகன திருடர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணன்  என்பவர், மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையில் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதி கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு இளைஞர்கள் வாகனத்தை எடுத்து செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்