சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு - 46 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 46 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு - 46 பேர் படுகாயம்
x
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொடுவாயூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுற்றுலா சென்றுவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்புகளை உடைத்து கொண்டு, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 குழந்தைகள் உள்பட 46 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்