மணல் கடத்தலை தடுத்தவர் கொலை : ராமநாதபுரத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு

மணல் கடத்தலை தடுத்தவரை, கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மணல் கடத்தலை தடுத்தவர் கொலை : ராமநாதபுரத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு
x
மணல் கடத்தலை தடுத்தவரை, கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள இளமனூர் பகுதியில் இருக்கும், கண்மாயில் மணல் எடுத்தவர்களை தடுத்த 2 பேர் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்,  மோகன் என்பவரை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மோகனை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள்,  நேற்றிரவு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை ஊர் மக்கள் முற்றுகையிட்டபோது, இளைஞர் ஒருவர், பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்