காவலர் தூக்கிட்டு தற்கொலை : காதல் பிரச்சினை காரணமா ?
காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லாணை. 2017 ஆம் ஆண்டு முதல் தற்காலிக பணிநீக்கத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில், காவல்துறை நண்பர் சுந்தரை காண்பதற்காக , மதுரை ஆறாவது சிறப்பு காவல் படை குடியிருப்புக்கு வந்தபோது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
Next Story