கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
x
கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று, கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் கண்காட்சி, இந்த ஆண்டு 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான மலர்ச்செடிகளும், மலர்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 3 நாளில் 2வது நாளான இன்று பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் பயணிகளை மேலும் கவரும் விதமாக நடத்தப்பட்ட பரதநாட்டியம், கராத்தே, சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி ஆகியவற்றை மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்