கொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று, கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் கண்காட்சி, இந்த ஆண்டு 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல்வேறு வகையான மலர்ச்செடிகளும், மலர்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 3 நாளில் 2வது நாளான இன்று பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் பயணிகளை மேலும் கவரும் விதமாக நடத்தப்பட்ட பரதநாட்டியம், கராத்தே, சிலம்பாட்டம், கயிறு இழுக்கும் போட்டி ஆகியவற்றை மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
Next Story