திருமலை ஏழுமலையானை தரிசித்த தமிழக முதலமைச்சர்
திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இன்றைய தினம் வழக்கமாக நடைபெறக் கூடிய அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் முதலமைச்சர் குடும்பத்தினருடன் பங்கேற்றார். தேவஸ்தான இணை மற்றும் துணை செயல் அலுவலர்கள் முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்று, ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாரங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக ஆசிர்வாதம் செய்து வைத்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, திருப்பதியில் இருந்து அவர் சென்னை புறப்பட்டார்.
Next Story