4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார்.
4 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோவில் சவாரி - பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
x
சென்னையில் ஆட்டோவில் சவாரி செய்த ரவுடிகளிடம் பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அரிவாள் வெட்டுக்கு ஆளாகியுள்ளார். சென்னை அம்பேத்நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி, மாரிமுத்து, முரளி, ராஜன் ஆகியோர் அழைத்த‌தன் பேரில் எண்ணூர் பகுதி முழுவதும் சுற்றியுள்ளார். 4 மணி நேரமாக சுற்றிய பின், அவர்கள் மீண்டும் அம்பேத்கர்நகர் பகுதிக்கு வந்து இறங்கியுள்ளனர். இதையடுத்து, ஓட்டுநர் ராஜேஷ் சவாரி செய்த‌த‌ற்கு பணம் கேட்ட நிலையில், ரவுடிகளான தங்களிடமே பணம் கேட்கிறாயா என கூறி, மறைத்துவைத்திருந்த அரிவாளால் ராஜேஷை வெட்டியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார், அந்தோணி, மாரிமுத்து, முரளி, ராஜன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்