சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
x
சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்மல் பிரதான சாலையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் நடத்திய தோதனையில் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இதுதொடர்பாக 20 பேரை கைது செய்துள்ள போலீசார், ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்