பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவினர் மறியல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
பேனரை கிழித்ததாக ஒரு பிரிவினர் புகார்...பொய்புகார் அளிப்பதாக மற்றொரு பிரிவினர் சாலை மறியல்
x
தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், யானைக்கல் என்ற இடத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியினர் வைத்திருந்த விளம்பர தட்டி திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியினர் வளநாடு போலீசில் புகார் அளித்தனர். அதில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு தரப்பினர்தான் விளம்பர தட்டியை கிழித்து விட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், ஆத்திரமடைந்த மினிக்கியூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர்,  அடிக்கடி பொய் புகார்களை கொடுப்பதாக குற்றம்சாட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கலைந்து சென்ற அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வர தாமதமானதால், மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நெடுஞ்சாலையில் மறியல் நடைபெற்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்