கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

சென்னை ஆவடி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
x
சென்னை ஆவடி அருகே கிணற்றில்  மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பட்டாபிரம் பகுதியை சேர்ந்த ராஜசேகரின் மகன் கோபி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கோபி, பாலவேடு பகுதியில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்துள்ளார். கோபிக்கு நீச்சல் தெரியாததால், அவர் மேலே வர முடியாமல் தவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கோபியின் வீட்டிற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்புத்துறையினருடன் பெற்றோர் விரைந்தனர். ஆனால், அதற்குள் மாணவன் கோபி கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். 


Next Story

மேலும் செய்திகள்