மஞ்சு விரட்டு போட்டி - மாடு முட்டி இளைஞர் பலி
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்டுத்தி உள்ளது. அங்குள்ள மேலக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியின் போது, நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை பிடிக்க முயன்ற அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த பாலகுரு என்கிற இளைஞரை மாடு முட்டி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story