"திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது" - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை

திமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என கனிமொழி கூறியுள்ளார்.
திராவிடம் உயிரோடு இருப்பதை வெற்றி காட்டுகிறது - கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை
x
திமுகவின் வெற்றி அதிமுகவுக்கு எவ்வாறு அமையும் என்பது வரும் நாட்களில் தெரியும் என  கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற அவர், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான கருணாநிதி நினைவிடத்தில், வெற்றிச் சான்றிதழை வைத்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மை வெற்றிபெறச் செய்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்ற கனிமொழி, கருணாநிதி இல்லாத ஒன்றுதான் குறை என்றார். தமிழகத்திலும், கேரளாவிலும், பாஜக தோற்றிருப்பது திராவிடம் உயிரோடு இருப்பதை காட்டுவதாக கூறிய கனிமொழி, மாநிலங்களவையில் பணியாற்றியது போல், மக்களவையிலும் பணியாற்றுவேன் என்றார். இதன்போது, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர். டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் , திருவாரூரில் வென்ற பூண்டி கலைவாணன் ஆகியோரும் வெற்றிச் சான்றுடன் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்