கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.
கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி
x
திருச்செங்கோட்டை அடுத்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த தறி தொழிலாளி கல்யாண சுந்தரத்துக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடன் வேலை பார்த்து வந்த பூங்கொடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில், கல்யாண சுந்தரத்திற்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கல்யாணசுந்தரத்திற்கும் 2வது மனைவி பூங்கொடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவரின் கழுத்தை அறுத்த பூங்கொடி, அவர் தன்னை கொல்ல முயன்றதாக கூறி நடித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது கல்யாணசுந்தரம் பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், பூங்கொடியிடம் விசாரித்தபோது, உண்மை அம்பலமாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்