மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை
x
கடை உரிமையாளர் ரகுபதி, வெளியூர் சென்றுவிட்ட நிலையில் கடையை ஊழியர்கள் பராமரித்து வந்தனர். மீண்டும் இன்று ஊழியர்கள் கடையை திறந்தபோது, கடை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்து. 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கணினி பாகங்கள் 50 மூட்டை அரிசி உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்