சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு
கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது. கடலூர் ஜோதி நகர் பகுதியில் சாலை போடுவதற்காக தார் பேரல்கள் வைக்கப்பட்டுள்ளன. வெயில் காரணமாக வெளியேறி இருந்த தாரில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நல்ல பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பாம்பு ஆர்வலர் செல்வாவிற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த செல்வா பாம்பை தாரிலிருந்து காப்பாற்றி அதற்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் பாம்பின் உடலில் இருந்த தாரை முழுவதுமாக சுத்தம் செய்து அதனை வனப்பகுதியில் விட்டார்.
Next Story