சர்வர் கோளாறு - ரயில்வே தேர்வுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அருகே ஆவடியில் ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வர் கோளாறு - ரயில்வே தேர்வுக்கு அனுமதி மறுப்பு
x
சென்னை அருகே ஆவடியில் ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் ரயில்வே பணிக்கான தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் 250க்கும் அதிகமானோர் தேர்வு எழுத வந்தனர். இந்நிலையில், காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாலை வரை காத்திருந்த இளைஞர்கள், ரயில்வே தேர்வு நிர்வாகம் விளக்கமோ, மறுதேர்வு குறித்த தகவலோ தெரிவிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 


Next Story

மேலும் செய்திகள்