இன்று வாக்கு எண்ணிக்கை - யாருக்கு சாதகமாகும்? : தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 45,480 பேர்

நாடாளுமன்றத்துக்கான 542 தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை - யாருக்கு சாதகமாகும்? : தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 45,480 பேர்
x
நாடாளுமன்றத்துக்கான 542 தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில், வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய ஆயுதப்படையினர் ஆயிரத்து 520 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 4 ஆயிரத்து 960 பேரும் மற்றும் 36 ஆயிரம் போலீசார் என மொத்தம் 45 ஆயிரத்து 480 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்