மே 27 முதல் வேலைநிறுத்த போராட்டம் - குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வரும் 27 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மே 27 முதல் வேலைநிறுத்த போராட்டம் - குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
x
நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வரும் 27 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 20 ஆயிரத்திற்கு அதிகமான இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. தனியார் லாரிகள் மூலம் சென்னைக்கு 5 கோடி லிட்டர் குடிநீர், நாளொன்றுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த போராட்டம் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்