சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ பிரிவின் கீழ் ஆட்டோ ஓட்டுனர் கைது

கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ பிரிவின் கீழ் ஆட்டோ ஓட்டுனர் கைது
x
கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவை காந்திபுரம் ராம்நகரைச் சேர்ந்த சிறுமியை, ஆட்டோ  ஓட்டுநர் மதியழகன், தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர்,  கோவை குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். ஆனாலும், அந்தச் சிறுமியைப் பார்ப்பதற்காக மதியழகன் தொடர்ந்து குளத்துபாளையம் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு  மதியழகன் சிறுமியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில்  வழக்கு பதிவு செய்த போலீஸார், மதியழகனை பிடித்தனர். இந்நிலையில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்