ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில், 4 பயணிகளிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
x
கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் ஜாகிர் உசேன் , முகம்மது யாசர் ஆகியோரும்,  சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில், சதக்கத்துல்லா என்பவரும், உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தியது தெரிய வந்த‌து. இவர்கள் மூவரும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த பாஷா மொய்தீன் என்பவரும் அதிகாரிகளிடம் சிக்கினார். இவர்கள் 4 பேரிடம் இருந்தும் மொத்தமாக 30 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்