மாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
x
பள்ளி கல்வித்துறைக்கென பிரத்யேக கல்விச் சேனல் துவங்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, சேனல் துவங்குவதற்கான பணிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. கல்வி மட்டுமில்லாமல், நாடகம், நடிப்பு, இசை, பாட்டு என பல துறைகளில் திறமை வாய்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் எட்டாவது தளத்தில், தொலைக்காட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கல்வி சேனல், வருகிற ஜூன் மாதம், சேவையை துவக்க உள்ளது. இதன் மூலம், மாணவர்களின் திறன் மேம்படும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்