நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை : சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை : சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி
x
வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களவை தொகுதி மற்றும் பெரம்பூர் பேரவை தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள், சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய சென்னை தொகுதி வாக்கு இயந்திரங்கள், லயோலா கல்லூரியிலும் தென்சென்னை  தொகுதி வாக்கு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. 3 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கையின்போது, 2500 போலீசார், முக்கிய இடங்களில் 2,500 போலீசார் என 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்