மத உணர்வை தூண்டியதாக புகார் : என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சேலம், சிதம்பரம் உள்பட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .
மத உணர்வை தூண்டியதாக புகார் : என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
x
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக, 8 பேர் மீது ஜனவரி 8-ல் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையை சேர்ந்த ரஷித், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மூன்று வீடுகளில் அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் 10 இடங்களில் நடைப்பெற்ற சோதனையில்,  மடிக் கணினிகள், பென்டிரைவ், செல்போன்கள், சிம்கார்டுகள், குறுந்தகடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்