சென்னையில் கத்தியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்ய கத்தியுடன் சுற்றித் திரிந்தவரகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் கத்தியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது
x
வண்ணாரப்பேட்டை  ஆட்டோ நிறுத்தத்தில், வரிசை முறையில் பயணிகளை ஏற்றி  செல்லும் முறை உள்ளது. இந்நிலையில், மூலக்கொத்தளம்  பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற ஆட்டோ ஓட்டுனர், ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தாமல் வழியில் பயணிகளை ஏற்றியுள்ளார். இதனால், மற்றொரு ஓட்டுநர் அர்ஜுனனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அர்ஜூனனை கொலை செய்வதற்காக கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு ஆனந்த் வந்துள்ளார். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றிய அவர்களை பார்த்த பொதுமக்கள்,  போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடி ஆனந்த் உள்ளிட்ட மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்