"ஆன்லைன் மணல் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
ஆன்லைன் மணல் பதிவு முறையை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
ஆன்லைன் மணல் பதிவு முறையை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் பதிவு மூலம் ஒரு லாரிக்கு மாதம் ஒரு முறைதான் மட்டுமே மணல் லோடு கிடைப்பதாக தெரிவித்தார். இதனால் லாரி உரிமையாளர்கள் உட்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் சிரமப்படுவதாகவும் அவர் கூறினார்.
Next Story