"கோட்சே பற்றி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கு

"கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி" என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கோட்சே பற்றி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டும் - உயர்நீதிமன்றத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  வழக்கு
x
"கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி" என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி  தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  தந்தை பெரியார் திராவிடர் கழக துணை தலைவரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில், காந்தியை கொன்ற கோட்சே யார் என்பது பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார்.  கோட்சே பற்றிய உண்மைகளை மக்களுக்கு சொல்லும் வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லை பகுதியில் வரும் 26ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி,மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பித்தும்,  நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விடுமுறை கால அமர்வில் வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்