"வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்துடன் இருங்கள்" - முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக முகவர்கள் கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்துடன் இருங்கள் - முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
x
23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக முகவர்கள் கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, ராமநாதபுரம், கரூர், தேனி ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே வாக்கு எண்ணிக்கையின் போது மோசடி நிகழாமல், மிக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லு இருக்கும் திமுக முகவர்களை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்