அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் வண்ண தொலைக்காட்சிப்பெட்டி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய சேனல் தொடங்க இருப்பதால் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் வண்ண தொலைக்காட்சி பெட்டி பயன்பாட்டில் இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பள்ளி கல்வித்துறை சார்பில் வருகிற ஜூன் மாதத்தில் புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story