வேலூர் : குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
வேலூர் : குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
x
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதிகாரிகளிடம் இது குறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த மக்கள் தீடீரென சோளிங்கர் - சித்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும், பேரூராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்