ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : மேலும் ஒருவரை காவலில் எடுக்க முடிவு

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், செவிலி அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : மேலும் ஒருவரை காவலில் எடுக்க முடிவு
x
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், செவிலி அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார், கடந்த வாரம் திருச்சியில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்