நடுவானில் பறந்தபோது இயந்திர கோளாறு : சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

திருச்சியில் இருந்து 165 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் எந்திரக் கோளாறால், நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுவானில் பறந்தபோது இயந்திர கோளாறு : சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
x
திருச்சியில் இருந்து165 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்ட விமானம் எந்திரக் கோளாறால், நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 165 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் புறப்பட்ட ஸ்கூட் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி, சென்னை விமான நிலையத்தில் அதிகாலை மூன்றரை மணி அளவில் அவசரமாக தரையிறக்கினார். விமானியின் இந்த துரித செயலால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். தற்போது அனைவரும் சென்னையில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சிங்கப்பூரிலிருந்து மெக்கானிக் குழு வரவழைக்கப்படுகிறது. இன்று இரவுக்குள் விமானம் சிங்கப்பூர் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்