கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 2 துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 2 துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல்
x
அருநுாற்றுமலை கிராமத்தில், மிதிக்குட்டை காப்புக்காடு பகுதியில், கள்ளத் தனமாக இயங்கி வந்த நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலையை, வனத்துறையினர்  கண்டறிந்தனர். இரண்டு துப்பாக்கிகள், 20 துப்பாக்கி கட்டைகள், உதிரி பாகங்கள் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றிய வனத்துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார், தப்பியோடிய பெண் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். பெரியகுட்டி மடுவு கிராமத்தை சேர்ந்த வரதன் மகன் ராமர், கரியான் மகன் ராமர் ஆகிய இருவரும் வனப் பகுதியில், ஈட்டி மரங்களை வெட்டி, கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்தது  தெரிய வந்தது. இவர்களுடன் இருந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்