மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்
சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 195வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றபோது அ.ம.மு.க. வினர் உள்ளே செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, திமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச் சாவடி மையத்தின் அருகே கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் மறுத்ததால் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
Next Story