"எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது" - உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேச்சு
'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.
'எந்த ஒரு மொழியையும், வெறுக்க கூடாது' என்று, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார். கும்பகோணத்தில், குறள் மலைச்சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய அவர், 'தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லக் கூடிய நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தான், தமிழை அதிகம் வளர்த்து வருகின்றனர் என்றும் பேசினார். இந்த விழாவில், குறள் மலைச்சங்கம் சார்பில், திருக்குறளை வரலாற்றில் நினைவு கூரும் வகையில், மலையில் எழுத இருக்கும், முயற்சியை பலரும் பாராட்டினர்.
Next Story