காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.
காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்
x
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. இதையடுத்து காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் உடனடியாக வந்து தீயை அனைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், காவல் நிலைய வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்