மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காவிரிக்கரை அருகே உள்ள திம்ம நாயக்கன் படித்துறை பகுதியில் உள்ள இந்த கோயிலில், சக்தி கரகம் எடுத்தும், காப்பு கட்டியும் பக்தர்கள், காவிரிக்கரையில் இருந்து புறப்பட்டு, வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து, தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், பக்தர்கள் 20அடிநீல அலகு குத்தி தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்