பாலீஷ் போடுவதாக கூறி தங்க நகையை திருட முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் அமர்நாத் புதூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரிடம் பேசிய, வடமாநில இளைஞர் ஒருவர், தங்க நகை பழையதாக இருந்தால் அதை புதியது போல் மாற்றி தருவதாக கூறியுள்ளார்.
பாலீஷ் போடுவதாக கூறி தங்க நகையை திருட முயற்சி
x
இதனை உண்மையென்று நம்பிய காசி தன்னிடம் இருந்த 5 சவரன் நகையை வடமாநில இளைஞரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நகைக்கு பாலிஷ்போடுவது போல் நடித்த அவர், சிறிது நேரத்தில் நகையை எடுத்துக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த காசி கூச்சலிட்டதை தொடந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அவரை கயிற்றால் மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வடமாநில இளைஞரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்