4 தொகுதி இடைதேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை

அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
4 தொகுதி இடைதேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை
x
அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் நாளை  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு மற்றும் தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்​டது. இதைத் தொடர்ந்து அப்போது, சத்ய பிரத சாஹூ,  4 தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கும் பல ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்