பரமக்குடி அருகே போலீஸ் பூத்திற்குள் புகுந்த கேரள சுற்றுலா பேருந்து - விபத்தில் 5 பேர் காயம்

ராமநாதபுரம், பரமக்குடி அருகே கார் மற்றும் பேருந்து மோதியதில், போலீஸ் பூத்திற்குள் பேருந்து புகுந்து விபத்து ஏற்பட்டது.
பரமக்குடி அருகே போலீஸ் பூத்திற்குள் புகுந்த கேரள சுற்றுலா பேருந்து - விபத்தில் 5 பேர் காயம்
x
ராமநாதபுரம், பரமக்குடி அருகே கார் மற்றும் பேருந்து மோதியதில், போலீஸ் பூத்திற்குள் பேருந்து புகுந்து விபத்து ஏற்பட்டது. சூடியூரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது மகன் மோகன சுந்தரத்துடன், காரில் மதுரை - ராமேஸ்வரம் 4 வழிச்சாலை மாற்று பாதையில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கேரள சுற்றுலா பேருந்து மீது, கார் மோதியதில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து போலீஸ் பூத்திற்குள் புகுந்துள்ளது. இந்த விபத்தில் போலீஸ் பூத்தில் பணியில் இருந்த காவலர் சதீஷ் குமார், காரில் பயணம் செய்த ஜெயராமன், மோகனசுந்தரம், கேரள பயணிகள் இருவர் என மொத்தம் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்