கள்ளக்காதலியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கள்ளக் காதலியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கள்ளக் காதலியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் அப்சர்வேட்டு ரோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகுமார் அதனை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார். இதுகுறித்து முத்துக்குமாரின் மனைவி கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், சசிகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story