மின் இணைப்பை மாற்ற லஞ்சம் வாங்கிய மின் துறை வணிக ஆய்வாளர் கைது

மின் இணைப்பை மாற்ற லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மின் இணைப்பை மாற்ற லஞ்சம் வாங்கிய மின் துறை வணிக ஆய்வாளர் கைது
x
மின் இணைப்பை மாற்ற லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.  வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே,  அனந்தலை கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர், வீட்டு மின் இணைப்பை மும்முனை இணைப்பாக மாற்ற, வாலாஜா  மின் நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு பணியாற்றும்,  வணிக ஆய்வாளர் சரவணன், அதற்காக அரசு கட்டணத்தை விட கூடுதலாக 2 ஆயிரத்து 350 அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்த பாலாஜி, போலீசாரின் வழிகாட்டுதல் பேரில் சரவணனிடம் பணத்தை அளித்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்