கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் : குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் :  குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு
x
கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கரூரில் இருந்து முசிறி நோக்கி சென்ற காரில் 7 பேர் பயணம் செய்துள்ளனர். மகாதானபுரம் என்ற இடத்தில், பேருந்து ஒன்றை கார் முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.  இதில், காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட 3 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த அருணா, கோமதி ஆகிய இருவரும், சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அருணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த லாலாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து கிரேன் மூலம், கார் மற்றும் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுனர் முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்