திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல்
x
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுங்காம்பூண்டி கிராமத்தில் கடந்த 5 மாதமாக குடிநீர் இன்றி கிராமமக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்